Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமயபுர மாரியம்மன் கோவில் -உண்டியல் எண்ணிக்கை

ஜனவரி 26, 2021 01:10

திருச்சி : சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை  திங்கள்கிழமை எண்ணப்பட்டது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது.

இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில்  உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும்  பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர்  கே.பி. அசோக்குமார்  தலைமையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர்  எண்ணினர். அப்போது ரூ.  90  லட்சத்து  07  ஆயிரத்து  494 ரூபாய் ரொக்கமும்,  2 கிலோ  182  கிராம் தங்கமும், 4   கிலோ 174  கிராம்  வெள்ளியும், 140  அயல்நாட்டுநோட்டுகளும் கிடைக்கப் பெற்றன.

தலைப்புச்செய்திகள்